Wednesday, December 7, 2011

எகிறியது டாலர், சரிகிறது ரூபாய் இறக்குமதிகளுக்கு விழுந்தது அடி

எகிறியது டாலர், சரிகிறது ரூபாய் இறக்குமதிகளுக்கு விழுந்தது அடி

உலகமயமாக்கலில் ஒரு நாட்டை சார்ந்துதான் மற்றொரு நாடு இருக்கிறது. இதனால்தான் ஒரு நாட்டில் ஏற்படும் பொருளா£ர வீழ்ச்சி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலையும் ஐரோப்பிய யூனியனின் கடன் பிரச்னையும் உலகம் முழுவதும் மற்ற கரன்சிகளின் மதிப்பில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. கரன்சி மார்க்கெட்டில் முதலீட்டாளர்கள் அனைவரும் லாபம் கருதி டாலர்களை வாங்கிக் குவிப்பதால் இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரு டாலருக்கு ஸி52.73 ஆகக் குறைந்துள்ளது. இது வரும் நாட்களில் ஸி58 வரை குறையும் என எச்எஸ்பிசி வங்கி எச்சரித்துள்ளது.
ரூபாயின் மதிப்பு குறைய இது மட்டும் காரணமல்ல. பணவீக்கம் உயர்ந்து கொண்டே போகிறது. உள்நாட்டு உற்பத்தியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பங்குச் சந்தையோ பாதாளத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. நிதிப் பற்றாக்குறையும் உயர்ந்து கொண்டே போகிறது. கண்ணுக்கு தெரிந்து இந்திய பொருளாதாரத்தில் நல்ல விஷயங்கள் எதுவும் இல்லை. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான லாபம் தரக் கூடிய டாலரில் முதலீடு செய்கின்றனர். இந்திய ரூபாயை கொடுத்து டாலர்களை அதிக அளவில் வாங்குவதால் டாலருக்கு கிராக்கி ஏற்படுகிறது. இதனால் டாலர் மதிப்பு அதிகரிக்கிறது. அதன்பிறகும் டாலர் வாங்குவது குறையாமல் தொடர்ந்தால், டாலரின் மதிப்பு ஏறிக் கொண்டே போகும். ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே போகும். எப்போதெல்லாம் ரூபாய் மதிப்பு குறைகிறதோ அப்போதெல்லாம் ரிசர்வ் வங்கி களத்தில் குதிக்கும். தன்னிடம் இருக்கும் டாலர்களை விற்க ஆரம்பிக்கும். டாலர் புழக்கம் அதிகரிக்கும்போது, ரூபாய் மதிப்பு சரிவது நிற்கும¢. ஆனால் இந்தமுறை ரிசர்வ் வங்கி தலையிட்டும் ரூபாய் மதிப்பு சரிவது நிற்கவில்லை. அந்த அளவுக்கு டாலருக்கான தேவை அதிகரித்ததுதான் காரணம்.
இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி முதலீடு செய்த பணத்தை எடுத்துவிடுவது வழக்கம். வாங்கிய பங்குகள் அனைத்தையும் விற்று டாலராக மாற்றிக் கொள்ளும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் மீண்டும் முதலீடு செய்யும். இதை எதிர்பார்த்து இந்திய முதலீட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் பங்குகளை வாங்கிக் கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனையை ஆரம்பித்து விட்டன. இந்த மாதம் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒரே வாரத்தில் ஸி3,661 கோடி மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் விற்றுள்ளன. இதையெல்லாம் டாலர்களாக மாற்றும்போது, டாலருக்கு தேவை அதிகரிக்கிறது. ஆனால் இந்த ஆண்டு பங்குச் சந்தையின் செயல்பாடு எதிர்பார்த்த லாபத்தை தருமா என்ற சந்தேகத்தில் இந்திய நிறுவனங்களும¢ பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் பங்குகள் வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர். அதனால்தான் பங்குச் சந்தையும் அடி வாங்கி வருகிறது.
இந்தியாவை பொருத்தவரை ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். அதிகம் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ரூபாய் மதிப்பு சரிவால் பெரும் பாதிப்பை சந்திக்கும். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 70 சதவீதம் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன. இந்த இறக்குமதிக்கு டாலரில்தான் பணம் செலுத்த வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு பயங்கர சரிவை சந்தித்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்கள் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல், இறக்குமதிக்கு அதிகம் செலவிடும் நிறுவனங்களின் லாபம் பெரிதும் பாதிக்கும். ஏற்கனவே இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்கள் விலை உயர்வாலும் கடுமையான போட்டியாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களின் லாபம், ரூபாய் மதிப்பு சரிவால் மேலும் குறையும். உதாரணமாக ஸ்கோடா, வோக்ஸ்வாகன், ஜெனரல் மோட்டார்ஸ், ஹோண்டா, டொயோட்டா போன்ற நிறுவனங்கள் விற்பனை செய்யும் சொகுசு கார்களின் இன்ஜின் உள்ளிட்ட பெரும்பாலான பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இறக்குமதி செலவு அதிகரிக்கும்போது, கார் உற்பத்தி செலவும் அதிகரிக்கும். ஆனால் போட்டி காரணமாக விலையை உயர்த்த முடியாது. இதனால் லாபம் அடிபடும். இறக்குமதிக்கு சமமாக கார் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். மாருதி, ஹுண்டாய், நிசான், ஃபோர்டு நிறுவனங்களுக்கு அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஏனெனில் இவை அதிக அளவில் ஏற்றுமதியிலும் ஈடுபட்டு வருகின்றன.

இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் மின்னுற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை அதிகம் பாதிக்கப்படும் அதே நேரத்தில், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் காட்டில் அடை மழைதான். குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் சந்தோஷத்தில் உள்ளன. டாலர்களில் சம்பாதிக்கும் இந்த நிறுவனங்களின் லாபம், ரூபாய் மதிப்பு சரிவால் நல்ல அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.டி. நிறுவனங்களைப் பொருத்தவரை இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்தான் மிகப் பெரிய சந்தை. வருமானத்தில் பெரும்பகுதி டாலர்களில்தான் வருகிறது. எனவே ஐ.டி. நிறுவனங்கள் சந்தோஷமாக உள்ளன. நிறுவனங்களின் லாபம் அதிகரித்து பங்கு விலை உயர வாய்ப்புள்ளதால், ஐ.டி. பங்குகளில் முதலீடும் அதிகரித்துள்ளது.

கேரளாவில் கொண்டாட்டம்

கேரளாவை பொருத்தவரை வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அந்த மாநில மக்களும், ஏற்றுமதியும்தான் வருமானமே. இந்த இரண்டுமே ரூபாய் மதிப்பு சரிவால் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கேரள மாநிலத்தை சேர்ந்த 21 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் மாதாமாதம் தங்கள் குடும்பத்துக்கு பணம் அனுப்பி வருகிறார்கள். ரூபாய் மதிப்பு சரிவால் அவர்கள் அனுப்பும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் கேரள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதோடு நறுமணப் பொருட்கள், கடலுணவுப் பொருட்கள், முந்திரி, நார்பொருட்களுக்கும் ரூபாய் மதிப்பு சரிவால் நல்ல விலை கிடைத்து வருகிறது.

No comments:

Post a Comment